Friday, March 29, 2013

தூங்காதே தம்பி… தூங்காதே…

திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)
இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

தூங்காதே தம்பிதூங்காதே
தூங்காதே தம்பிதூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பிதூங்காதே தம்பி
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்

தூங்காதே தம்பிதூங்காதே

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பிதூங்காதே தம்பி
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்...

ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா


தூங்காதே தம்பிதூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பிதூங்காதே
தம்பிதூங்காதே

1 comment:

  1. Anonymous02:45

    போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்... என இருக்க வேண்டும் அய்யா.

    ReplyDelete