Friday, March 29, 2013

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திரைப்படம்: பணத்தோட்டம் (1963)
இசை: விசுவநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

=======================================

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

நல்லதை நினைத்தே போராடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கிற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

1 comment:

  1. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் எப்படி இருக்கின்றது என்று தெரியப்படுத்த ஆவலுடன் எதிர்பார்க்க ஓவியா பாலா

    ReplyDelete