Wednesday, March 27, 2013

நெஞ்சம் மறப்பதில்லை

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை
    பாடியவர்கள்: பீ. சுசீலா
    இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
    வரிகள்: கண்ணதாசன்

ஆஆ..............

    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும்
பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே

   நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை

தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...  

No comments:

Post a Comment